சென்னை ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்த 42 பேர் பெயில்ஆக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
நீதிபதியின் கருத்தை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று(ஜூலை 7) வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தனக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர், ஐகோர்ட்டிற்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? 365 நாட்களில் பள்ளிகள் செயல்படும் 160 நாட்கள் கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணிக்கு செல்வதில்லை. ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆண்டின் பாதி நாட்கள் கூட பணிக்கு வருவதில்லை. அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? பணிக்கு செல்லாமல் முறைகேடு செய்வோர் ஆசிரியர் சங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முறையாக பணிக்கு வருவது இல்லை என பிற ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. இது தொடர்பாக பலரும் எனக்கு கடிதம் எழுதி உள்ளனர். பெயில் ஆக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் வருவோர் தங்களது குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்
நீதிபதியின் கருத்தை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று(ஜூலை 7) வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தனக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர், ஐகோர்ட்டிற்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? 365 நாட்களில் பள்ளிகள் செயல்படும் 160 நாட்கள் கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணிக்கு செல்வதில்லை. ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆண்டின் பாதி நாட்கள் கூட பணிக்கு வருவதில்லை. அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? பணிக்கு செல்லாமல் முறைகேடு செய்வோர் ஆசிரியர் சங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முறையாக பணிக்கு வருவது இல்லை என பிற ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. இது தொடர்பாக பலரும் எனக்கு கடிதம் எழுதி உள்ளனர். பெயில் ஆக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் வருவோர் தங்களது குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை