பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர்களுக்கான விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால் ஆசிரியர்களின் விடுமுறைபற்றி விளக்கம் தர வேண்டும் என ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும், விடுமுறை எப்போது ஆரம்பிக்கும்? என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை மாணவர்களுக்கு மே மாதம் 1ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை என்பது கேள்விக்குறியாகவே பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், மே மாதம் 7, 8, 9, 10, 11, 21 ,22, 24, 25, 26, 28 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்றால், அதில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? அப்படி கலந்து கொண்டால் ஆசிரியர்களுக்கு கோடைவிடுமுறை என்பது இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.
இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தலைமை ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டுமா? அல்லது ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. இது குறித்து பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கோடை விடுமுறையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை