பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில்,
மாணவர்களுக்கு வீட்டு பாடமாக தற்கொலை கடிதம் எழுத சொன்னது, பெற்றோரை கோபப்படுத்தி உள்ளது.
இதற்காக பள்ளி முதல்வர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பெற்றோர் ஆவேசம்லண்டன் நகரில் கிட்பிரோக்கி என்ற இடத்தில் தாமஸ் டாலிஸ் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் டீன்ஏஜ் வயதுடைய மாணவர்கள், 60 பேருக்கு அவர்களின் ஆங்கில ஆசிரியர், வீட்டு பாடமாக தற்கொலை கடிதத்தை எழுதி வரும்படி கூறியுள்ளார். பிரபல எழுத்தாளர் ேஷக்ஸ்பியர் எழுதிய, 'மெக்பத்' கதையில் வரும் உருக்கமான தற்கொலை கடிதம் போல் இருக்க வேண்டும் எனவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.
இது பெற்றோருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒரு மாணவியின் தாய் கூறுகையில், ' என் மகளின் தோழிகள் சிலர் தற்கொலை செய்துள்ளனர். எனவே, இதுபோன்ற வீட்டு பாடம் என் மகளுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது' என்றார். இது குறித்து பள்ளி முதல்வர் கரோலின் ராபர்ட்ஸ் கூறுகையில், '' சம்பந்தப்பட்ட பெற்றோரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளோம்,'' என்றார்.
மாணவர்களுக்கு வீட்டு பாடமாக தற்கொலை கடிதம் எழுத சொன்னது, பெற்றோரை கோபப்படுத்தி உள்ளது.
இதற்காக பள்ளி முதல்வர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பெற்றோர் ஆவேசம்லண்டன் நகரில் கிட்பிரோக்கி என்ற இடத்தில் தாமஸ் டாலிஸ் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் டீன்ஏஜ் வயதுடைய மாணவர்கள், 60 பேருக்கு அவர்களின் ஆங்கில ஆசிரியர், வீட்டு பாடமாக தற்கொலை கடிதத்தை எழுதி வரும்படி கூறியுள்ளார். பிரபல எழுத்தாளர் ேஷக்ஸ்பியர் எழுதிய, 'மெக்பத்' கதையில் வரும் உருக்கமான தற்கொலை கடிதம் போல் இருக்க வேண்டும் எனவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.
இது பெற்றோருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒரு மாணவியின் தாய் கூறுகையில், ' என் மகளின் தோழிகள் சிலர் தற்கொலை செய்துள்ளனர். எனவே, இதுபோன்ற வீட்டு பாடம் என் மகளுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது' என்றார். இது குறித்து பள்ளி முதல்வர் கரோலின் ராபர்ட்ஸ் கூறுகையில், '' சம்பந்தப்பட்ட பெற்றோரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளோம்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை