தமிழக அரசு சார்பில் சாலைபாதுகாப்பு ஆணையர் நேற்றுவெளியிட்டுள்ள அறிக்கை:போக்குவரத்து துறைஅமைச்சர் தலைமையில்மாநில சாலை பாதுகாப்பு குழுகூட்டம்
தலைமை செயலகத்தில்நடைபெற்றது. இந்தகூட்டத்தில் தலைமைசெயலாளர், உள்துறை,நிதித்துறை, நெடுஞ்சாலைதுறை, நகராட்சி மற்றும் குடிநீர்வழங்கல் துறை,போக்குவரத்து துறைசெயலாளர்கள், காவல் துறைஇயக்குநர், சென்னைபெருநகர காவல் ஆணையர்மற்றும் பிற துறைகளைசேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், உச்ச நீதிமன்றசாலை பாதுகாப்பு குழுவின்பரிந்துரையை ஏற்று,வாகனத்தை அதிவேகமாகஇயக்குதல், சிவப்பு விளக்கைதாண்டுதல், குடிபோதையில்வாகனம் ஓட்டுதல்,வாகனத்தை ஓட்டும்போதுசெல்போனைபயன்படுத்துவது, சரக்குவாகனங்களில் அதிக பாரம்ஏற்றுதல் அல்லது சரக்குவாகனங்களில் ஆட்களைஏற்றுதல் போன்றபோக்குவரத்துவிதிமீறல்களுக்குசம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின்ஓட்டுநர் உரிமங்களைதற்காலிகமாக அல்லதுநிரந்தரமாக ரத்து செய்யுமாறுகூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
மேலும், உயிரிழப்புஏற்படுத்திய வாகனஓட்டுநர்களின் ஓட்டுநர்உரிமங்களை திரும்பப்பெறுவதற்கு முன்பாகதமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகத்தினரால் நடத்தப்படும்பயிற்சி மையங்களில் இரண்டுநாள் புத்தாக்க பயிற்சியினைஅவரவர்களின் சொந்தசெலவில் மேற்கொண்டு உரியசான்றினை பெற்று சமர்ப்பிக்கவேண்டும். வாகன ஓட்டிகள்அனைவரும் வாகனத்தைஓட்டும்போது அசல் உரிமம்வைத்திருக்க வேண்டும்.சோதனை அலுவலர்கள்ஆய்வின்போது அசல்உரிமத்தை கட்டாயம்காண்பிக்க வேண்டும்.
ஹெல்மெட் போடாவிட்டால் 2மணிநேரம் பாடம் படிக்கவேண்டும்
அரசின் செய்திக்குறிப்பில்‘இரு சக்கர வாகன ஓட்டிகள்மற்றும் பின்னால் அமர்ந்துசெல்லும் பயணியும்கட்டாயமாக தலைக்கவசம்அணிய வேண்டும்.தலைக்கவசம் அணியாமல்இருசக்கர வாகனம் ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகளைஅருகாமையில் உள்ள தாலுகாகாவல் நிலையம் அல்லதுவட்டார போக்குவரத்துஅலுவலகம் அழைத்துச்சென்று குறைந்த பட்சம்இரண்டு மணி நேரம்விழிப்புணர்வு பற்றிய பயிற்சிகொடுக்கப்பட வேண்டும்,அத்துடன் உரியஅபராதத்தையும் வசூலிக்கவேண்டும் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை