நீட் தேர்வில், அரசுப்பள்ளியில் பயின்றதமிழகத்தைச் சேர்ந்தஇரட்டை சகோதரிகள்வெற்றி பெற்றுள்ளனர்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட,மருத்துவப்
படிப்பில் மாணவர்சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள்இன்று (வெள்ளிக்கிழமை)காலை 10.30 மணியளவில்வெளியிடப்பட்டது.
நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
நீட் தேர்வில் முதல் 25இடங்களைப் பிடித்தமாணவர்கள் பட்டியலில்தமிழகத்தைச் சேர்ந்த எந்தஒரு மாணவ மாணவியும்இடம்பெறவில்லை என்பதுவேதனையானவிஷயம்தான். ரேங்க்பட்டியலில்இல்லாவிட்டாலும் நீட்தேர்வில் தமிழகத்தைச்சேர்ந்தவர்களும் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
வந்தவாசியைச் சேர்ந்தஅன்புபாரதி, நிலாபாரதிசகோதரிகள். வந்தவாசிஅரசு மேல்நிலைப்பள்ளியில்தான் அன்புபாரதியும் நிலா பாரதியும்பயின்றனர். நடந்து முடிந்தபிளஸ் 2 தேர்வில் அன்புபாரதி 1165மதிப்பெண்களும்,நிலாபாரதி 1169மதிபெண்களும் பெற்றனர்.இதனையடுத்து அவர்கள்நீட் தேர்வுக்குஆயத்தமாகினர்.
நீட் தேர்வைஎதிர்கொண்டது குறித்துஅவர்கள் 'தி இந்து'விடம்கூறும்போது, "பிளஸ் 2தேர்வு முடிந்தவுடன் ஐந்துநாட்கள் ஓய்வு எடுத்தோம்.பின்னர் நீட் தேர்வுக்காகதிட்டமிட்டோம். நீட் 2014தேர்வு வினாத்தாள், எய்ம்ஸ்முந்தையவினாத்தாள்களை வாங்கிபயிற்சி மேற்கொண்டோம்.பள்ளியில் நல்லமதிப்பெண் எடுத்திருந்தும்எங்களுக்கு அந்தக்கேள்விகள் புதிதாகஇருந்தன. அதனால்,சிபிஎஸ்இ 11, 12 வகுப்புபுத்தகங்களை வாங்கிப்படித்தோம்.
அதன் பின்னரே எங்களால்அந்தக் கேள்வித்தாளில்இருந்த வினாக்களுக்குபதில் அளிக்க முடிந்தது. நீட்தேர்வை சிறப்பாகஎதிர்கொள்ளவேண்டுமானால் சிபிஎஸ்இதரத்துக்கு பாடத்திட்டம்மாற்றப்பட வேண்டும்"என்றனர்.
நீட் தேர்வில் அன்பு பாரதி151 மதிப்பெண்களும்நிலாபாரதி 146மதிப்பெண்களும்பெற்றுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை