அரசு பள்ளிகளில் பணிபுரியும் 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
🔸 அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 17 ஆயிரம் ஆசிரியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔹 கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கலைக்கல்லூரியில் நடைபெற்ற தியானப் பயிற்சி விழாவை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.
🔸 அப்போது விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.
🔹 தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்தது என்ற நிலை விரைவில் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
🔸 அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்கப்படும் என்றும், அவர்களை பணி நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை