Ad Code

Responsive Advertisement

17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் (BC, KH Head and ...)

அரசு பள்ளிகளில் பணிபுரியும் 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.




🔸 அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 17 ஆயிரம் ஆசிரியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


🔹 கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கலைக்கல்லூரியில் நடைபெற்ற தியானப் பயிற்சி விழாவை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.

🔸 அப்போது விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.

🔹 தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்தது என்ற நிலை விரைவில் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

🔸 அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்கப்படும் என்றும், அவர்களை பணி நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement