Ad Code

Responsive Advertisement

TET தேர்வு விடைக்குறிப்பு : ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு

'ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால், தகுந்த ஆதாரத்துடன், வரும், 27ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்' என, ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் - 1ல், 2 லட்சத்து, 41 ஆயிரத்து, 555 பேரும், தாள் - 2ல், 5 லட்சத்து, 12 ஆயிரத்து, 260 பேரும் தேர்வுகளை எழுதி உள்ளனர். இத்தேர்வின், கேள்வித்தாளுக்கு உரிய தற்காலிக விடைக்குறிப்புகள், http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.


இவற்றின் மீது, தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, வரும், 27க்குள், ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். ஒவ்வொரு விடைக்கும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, பிரத்யேக படிவத்தில், ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களின் ஆதாரத்தை மட்டும் அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதுாரக் கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்கப்படாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement