கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியை தள்ளிப்போடலாமா? என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கோடை விடுமுறை தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்
அனைத்தும் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் கடுமையாக உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதன் காரணமாக ஏரிகள், குளங்களில் தண்ணீர் வற்றின. நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருக்கிறது.
மாணவ-மாணவிகள் குடி நீருக்கே அவதிப்பட நேரிடும். அதிகாரிகள் ஆலோசனை கடுமையான வெயில் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவ-மாணவிகள் சோர்வு அடையும் நிலை ஏற்படும். வெயில் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டன. அதேபோல் பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியையும் தள்ளிப்போட வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
எனவே கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கூடங்களை திறக்கும் தேதியை தள்ளிப்போடலாமா? என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். ஏற்கனவே 2013-ம் ஆண்டு ஒரு வாரம் பள்ளிக்கூடங்கள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை