கேரளாவில், வரும் கல்வியாண்டிலிருந்து, முதல் வகுப்புக்கே, 'டிஜிட்டல்' வழி கல்வி முறையை அறிமுகப் படுத்தப் போவதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஐ.சி.டி., எனப்படும், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு என்ற தொழில்நுட்பம் மூலமாக, அரசு பள்ளிகளில், 8 - 10 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, டிஜிட்டல் வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல், 1 - 7ம் வகுப்பு மாணவர்களுக்கும், டிஜிட்டல் வழி கல்வியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக, கேரள மாநில கல்வி துறை தெரிவித்துள்ளது.
இதற்காக, மாணவர்களுக்கான பிரத்யேக இணையதளம் மற்றும் பாடம் குறித்த தகவல்கள் அடங்கிய, 'டிவிடி'யையும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கேரள மாநில கல்வி துறை அமைச்சர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை