சிவகங்கையில் நடந்த ஆசிரியர் கவுன்சலிங்கில் சர்வர் பிரச்னையால் பணி உத்தரவு பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்தனர். ஆண்டுதோறும் மே மாதத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சலிங் நடத்தப்படும்.
சில ஆண்டுகளாக பள்ளி திறந்தவுடன் தாமதமாக கவுன்சலிங் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் மே மாதம் விடுமுறை காலத்திலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் கவுன்சலிங் தொடங்கியது.
சிவகங்கையில் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக எஸ்எஸ்ஏ அலுவலகத்தில் நேற்று காலை, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சலிங் நடந்தது. இதில் 11 பேர் பணி உத்தரவு பெற்றனர். பிற்பகலில் ஒன்றியத்திற்குள் மாறுதல் பெற வேண்டிய பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான சர்வர் இரவு 7 மணி வரை செயல்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் 70க்கும் மேற்பட்டோர் இரவு வரை உத்தரவு பெற முடியாமல் தவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை