அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு சட்டம் - 2016-ன் படி மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசுப்பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த உத்தரவானது தமிழக அரசுப் பணிகளுக்கு மட்டுமின்றி பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவிபெறும் அமைப்புகள் என அனைத்திற்கும் பொருந்தும்.இந்த 4% இட ஒதுக்கீட்டில் 1% பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கும், 1% செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கும், 1% கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மீதமுள்ள 1% அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து தற்பொழுது மாநில அரசும் அறிவிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை