Ad Code

Responsive Advertisement

1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டம் மாற்றம்! மனப்பாட கல்வி முறைக்கு 'குட்பை'


மனப்பாட கல்விமுறையை கைவிடும்வகையில், ஒன்று முதல்பிளஸ் 2 வகுப்பு வரை,பாடத்திட்டம்மாற்றப்படுகிறது.அறிவியல் பாடத்தில்,கணினி அறிவியலும் இடம்பெறுகிறது.பள்ளிபாடத்திட்ட மாற்றத்திற்கான

அரசாணையை,பள்ளிக்கல்வி செயலர்உதயசந்திரன், நேற்றுவெளியிட்டு உள்ளார்.


அதன் விபரம்: சர்வதேசஅளவிலான அறிவியல்,சமூக, பொருளாதாரவளர்ச்சி, போட்டிதேர்வுகளில், தமிழகமாணவர்களின் வெற்றியைகருத்தில் கொண்டு,பாடத்திட்டம்மாற்றப்படுகிறது.

சி.பி.எஸ்.இ.,யை விடமேலானதாகவும், தமிழகபண்பாடு, கலாசாரத்திற்குமுக்கியத்துவம் அளிக்கும்விதமாகவும்,பாடத்திட்டத்தை உருவாக்க,மே, 11ல், வல்லுனர் குழுமுடிவு எடுத்தது.

அதன்படி, 2018 - 19ம்கல்வியாண்டில், ஒன்று,ஆறு, ஒன்பது மற்றும்பிளஸ் 1 வகுப்புகளுக்கு,புதிய பாடத்திட்டம்அமலாகும்.


2019 - 20ல், இரண்டு, ஏழு, 10மற்றும் பிளஸ் 2வகுப்புகளுக்கும், 2020 - 21ல்,மூன்று, நான்கு, ஐந்துமற்றும் 8ம் வகுப்புகளுக்கும்,பாடத்திட்டம் மாற்றப்படும்.

ஆறு முதல், 10ம் வகுப்புவரையான, அறிவியல்பாடத்தில், கணினிஅறிவியல் அல்லது ஐ.டி.,எனப்படும், தகவல்தொழில்நுட்பவியல்பற்றியபாடப்பகுதியும்இணைக்கப்படும். இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.

பாடத்திட்டம் எப்படி மாற்றிஅமைக்கப்பட வேண்டும்என்பது குறித்து, அரசு சிலநெறிமுறைகளைவகுத்துள்ளது.


அதன் விபரம்:* கற்றலைமனப்பாட நிலையில்இருந்து மாற்றி, படைப்பின்பாதையில் பயணிக்கவைக்க வேண்டும்

* தோல்வி பயம் மற்றும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்தேர்வுகளை மாற்றி,கற்றலின் இனிமையைஉறுதி செய்யும் வகையில்,பாடம் அமைய வேண்டும்

* தமிழர்களின் தொன்மை,வரலாறு, பண்பாடு, கலை,இலக்கிய பெருமிதஉணர்வை, மாணவர்கள்,அறிவியல்தொழில்நுட்பத்தின் மூலம்தெரிந்து கொள்ள,பாடத்திட்டம் உறுதி செய்யவேண்டும்

* அறிவு தேடல் என்பது,வெறும் ஏட்டறிவு என,குறைத்து மதிப்பிடாமல்,அறிவுஜன்னலாய்புத்தகங்கள் வழிகாட்டவேண்டும் என்றஅடிப்படையில், பாடத்திட்டம்அமைய வேண்டும்.

இவ்வாறு நெறிமுறைகள்வகுக்கப்பட்டு உள்ளன.


புத்தகம் படிக்க'மொபைல்ஆப்'



ஆசிரியர்களும்,மாணவர்களும், எளிதில்பயன்படுத்தக் கூடியவகையில், 'மொபைல் ஆப்'என்ற மொபைல் போன்செயலி உருவாக்கப்படும்.ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும்செய்முறை மற்றும் பயிற்சிகையேடுகள் வழங்கப்படும்.



அண்ணா பல்கலைபாடத்திட்டம்!



தொழிற்கல்விக்கு, எட்டுஆண்டுகளாக பாடத்திட்டம்மாறவில்லை. வளர்ந்துவரும் தொழில்நுட்பவளர்ச்சிக்கு ஏற்ப,தொழிற்கல்விபாடத்திட்டங்கள் மாற்றம்செய்யப்பட உள்ளன.


அண்ணா பல்கலை,வேளாண் பல்கலை மற்றும்தொழில்சார்பல்கலைகளுடன்இணைந்து, மாநிலகல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம்,தொழிற்கல்விபாடத்திட்டத்தை, மாற்றமுடிவு செய்துள்ளது. பிளஸ்1க்கு, 2018 - 19 மற்றும் பிளஸ்2வுக்கு, 2019 - 20ம் ஆண்டில்,இந்த மாற்றம் இருக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement