மதுரை, ''பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கையை, ஜூலைக்குள் நிறைவேற்றாவிடில் ஆகஸ்டில் போராட்டத்தை தவிர்க்க முடியாது,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் அன்பரசு தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உதயகுமார் பேசினர்.
அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம், இடைக்கால நிவாரணம் வழங்கும் நிலை உருவாகாமல் சம்பள கமிஷன் அமைப்பது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, ஜூலைக்குள் ஆய்வு நடத்தி நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர்கள், அரசு செயலர்கள் ஏற்றுக் கொண்டனர். அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன. கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். பேச்சில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை, ஜூலைக்குள் நிறைவேற்ற வேண்டும். தவறினால் ஆகஸ்டில், மீண்டும் காலவரையற்ற போராட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உதயகுமார் பேசினர்.
அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம், இடைக்கால நிவாரணம் வழங்கும் நிலை உருவாகாமல் சம்பள கமிஷன் அமைப்பது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, ஜூலைக்குள் ஆய்வு நடத்தி நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர்கள், அரசு செயலர்கள் ஏற்றுக் கொண்டனர். அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன. கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். பேச்சில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை, ஜூலைக்குள் நிறைவேற்ற வேண்டும். தவறினால் ஆகஸ்டில், மீண்டும் காலவரையற்ற போராட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை