ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தை மார்ச் 31-ந்தேதிக்கு பின் தொடர 5
கோடி பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ பிரைம் திட்டத்தில் சேராதவர்களின் நிலை என்னவாகும்?
ரிலையன்ஸ் ஜியோவில் பிரைம் திட்டத்தில் சேராதவர்கள் நிலை என்ன?
ஜியோ இலவச டேட்டா சேவையை பயன்படுத்தி வரும் 10 கோடி வாடிக்கையாளர்களில் 5 கோடி பேர் ஜியோ அறிமுகம் செய்துள்ள ஜியோ பிரைம் திட்டத்தில் ரூ.99 ரீசார்ஜ் செய்து ஜியோ பிரைம் உறுப்பினர்களாகியுள்ளனர். ஜியோ நிர்ணயித்திருந்த இலக்கைவிட 50%க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் ஜியோ பிரைம் உறுப்பினராக இணைந்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த இலவச சேவை மார்ச் 31ந் தேதியுடன் நிறைவடைவதையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டண சேவைக்கு மாறுவதற்கு முன்பாக ரூ.99 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும்பொழுது அடுத்த மார்ச் 31,2018 வரை ஜியோவின் சிறப்பு சலுகைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்த பின் ரூ.303 செலுத்தினால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களுடன் தினமும் 1 ஜிபி 4ஜி இண்டர்நெட் வழங்கப்படுகிறது, இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யாமல் ரூ.303 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களுடன் 28 நாட்களுக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
உலகின் மிக வேகமாக வளரும் பிராண்டுகளில் ஒன்றாக விளங்குகின்ற இந்த நிறுவனத்தினம் தற்போது 10-10.5 கோடி பயனர்களை வைத்துள்ளது, இதில் 30% பேர் இலவச டேட்டா சேவைக்காக ஜியோவை இரண்டாம் பட்சமாக பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள 7 கோடி பேரில் மூன்றில் இரண்டு பங்கு ஜியோ பிரைம் சேவையில் இணைந்து வருகின்றனர். வர்த்தக ரீதியில் முன்னணி வகித்து வரும் ஜியோ மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் அல்லது ஜியோ எண்ணிற்கு வேறு எந்த ரீசார்ஜ்களையும் செய்யவில்லை எனில் குறிப்பிட்ட காலம் அதாவது ரீசார்ஜ் செய்யாமல் சுமார் 90 நாட்களுக்கு ஜியோ சிம் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.
ஜியோ ரீசார்ஜ் செய்யாமல் ஜியோ சேவைகள் எதுவும் வேலை செய்யாது, இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ், மற்றும் எஸ்எம்எஸ் எதுவும் வேலை செய்யாது.
ஜியோ பிரைம் திட்டத்திற்கு மட்டும் ரூ.99 செலுத்தியவர்களுக்கு 12 மாதங்களுக்கான பிரைம் திட்டம் மட்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். ரூ.99 அல்லாமல் மற்ற ரீசார்ஜ் செய்யாமல் ஜியோ சேவைகளை பயன்படுத்த முடியாது. இதனால் குறைந்த பட்சம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை