கல்லூரி வளாக அறையில் அடைத்துவைத்து எட்டு நாள்கள் மாணவனை சித்ரவதை செய்ததாக கோவை நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டார்.
கோவையில் பிரபலமான நேரு கல்வி குழுமம் இயங்கிவருகிறது. இந்தக் கல்வி குழுமத்தின் தலைவராக கிருஷ்ணதாஸ் உள்ளார். இந்தக் கல்வி குழுமத்துக்குச் சொந்தமான கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேரு கல்வி குழுமத்தில் திருச்சூர் எருமப்பட்டியைச் சேர்ந்த சக்கீர் சவுகத் என்கிற மாணவன் பயின்று வந்துள்ளார். இவரை, சில காரணங்களுக்காக கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் எட்டு நாள்களுக்கும் மேலாக அடைத்துவைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதனையடுத்து, தப்பி வந்த மாணவனின் புகாரின் பேரில் நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள் சிலரை திருச்சூர் எருமப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் பிரபலமாக செயல்படும் நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை