Ad Code

Responsive Advertisement

‘ஆதார்’ எண் அடிப்படையில் சில நிமிடங்களில் ‘PAN’ எண் பெறலாம்‘












‘ஆதார்’ எண் அடிப்படையில் சில நிமிடங்களில் வருமான வரி‘பான்’ எண்ணை பெறும் திட்டத்தை வருமான வரித்துறைசெயல்படுத்த உள்ளது. அதுபோல், வருமான வரியைஆன்லைனில்செலுத்த வசதியாக விரைவில் மொபைல் ஆப்அறிமுகம் ஆகிறது.

பான் எண்

வருமான வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை சார்பில்நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது. தற்போது,நாடுமுழுவதும் 25 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர்.ஆண்டுதோறும் 2 கோடியே 50 லட்சம் பேர், புதிதாக பான் கார்டுகேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய வடிவிலான பான்கார்டுகளை கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் வருமான வரித்துறைவழங்கி வருகிறது. வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல்ரொக்கமாக செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் ‘பான்’ எண்ணை குறிப்பிடுவதுகட்டாயம் ஆகும். ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கத்துக்கு பொருள்வாங்கும்போதும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும்.

சில நிமிடங்களில் பான் எண்

இந்நிலையில், ஒரு சில நிமிடங்களில் ‘பான்’ எண் பெறும் வசதியைவருமான வரித்துறை செயல்படுத்த உள்ளது. ‘ஆதார்’ கார்டுக்குபுகைப்படம் எடுக்கும்போது, விரல் ரேகை, கண்ணின் கருவிழிஉள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு இருக்கும்.சம்பந்தப்பட்ட நபர் எப்போது விரல் ரேகையை பதித்தாலும், அவரதுபெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாகதெரிந்து விடும். இந்த வசதியை பயன்படுத்தி, ‘ஆதார்’ எண்அடிப்படையில் ஒருவரது விவரங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,சில நிமிடங்களிலேயே அவருக்கு ‘பான்’ எண் வழங்க வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது.இதன்மூலம், எளிதாக பான் எண் பெற முடிவதால், இன்னும்ஏராளமானோரை வருமான வரி வளையத்துக்குள் கொண்டுவரமுடியும் என்று வருமான வரித்துறை கருதுகிறது.

மொபைல் ஆப்

இதுதவிர, வருமான வரியை ஆன்லைனில் செலுத்த வசதியாகமொபைல் ஆப் (செயலி) ஒன்றை உருவாக்கும் பணியிலும் வருமானவரித்துறை ஈடுபட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் இந்த ‘ஆப்’பைபயன்படுத்தி, வருமான வரி செலுத்தலாம், புதிதாக ‘பான்’ கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குநிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.இதுகுறித்து வருமான வரி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-மொபைல் ஆப் உருவாக்கும் பணி தொடக்க நிலையில் உள்ளது.மத்திய நிதி அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகு இத்திட்டம்செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement