Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி
* வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.
* இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு.
* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி வழங்கப்படும்.
* கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும்.
* சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2018, மே ஒன்றாம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும்.
விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி
* நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது.
* ரயில்வேத்துறை சுதந்திரமாக இயங்கும்
* வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வழி ஏற்படும்.
* விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்கு இலக்கு (கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி)
* உலக பொருளாதார வளர்ச்சி 2017ல் 3.4 ஆக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது.
* உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் நிலையாக உள்ளது.
* பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13,000 கோடி இலக்கு.(கடந்த ஆண்டு ரூ.5,500 கோடி)
* கச்சா எண்ணெய் விலையில் நிச்சயமற்ற நிலை நிலவுவது சவாலாக உள்ளது.
* பல்லாண்டு வரி ஏய்ப்பை தடுக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை உதவியுள்ளது.
* பணமதிப்பு நீக்க பாதிப்பை நீக்க புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்.

அமெரிக்காவால் பாதிப்பு
* அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
* இரண்டரை ஆண்டுகளில் பாஜக அரசு நிர்வாக சீர்திருத்தங்களை எடுத்துள்ளது.
* நாட்டின் முக்கியமான பொருளாதார காரணிகள் திருப்திகரமான உள்ளன.
* பணமதிப்பு நீக்கத்தின் விளைவு அடுத்த ஆண்டு தெரியவரும்.
* ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.
* கறுப்புப் பணத்திற்கு எதிரான பணமதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது.
* வேலைவாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்.
* பணமதிப்பு நீக்கம் என்ற முக்கியமான முடிவை அரசு செயல்படுத்தியுள்ளது.
* ஜிஎஸ்டியில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி.
* பண  மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டிற்கு நீண்ட கால பலனளிக்கும்.
* கடந்த ஓராண்டில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
* அரசின் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016ல் 36 சதவீதம் உயர்ந்துள்ளது.
* இளைஞர் நலன், வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியவத்தும் கொடுத்து வருகிறது.
* மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
* உலகப் பொருளாதாரம் நிலையாக இல்லாத நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement