புதுடில்லி: 'பொறியியல் கல்லுாரிகள், 'ஆன்லைனில்' புகார்களை பெற்று, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவை, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதி பெற்று, அதன் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுத், பொறியியல் கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: பொறியியல் கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், மற்றும் பிறர், தங்கள் குறைகளை ஆன்லைனில் புகார்களாக தெரிவிக்க வசதி ஏற்படுத்த வேண்டும். இணையதளம், இ - மெயில் உள்ளிட்டவற்றின் மூலம் புகார்களை அனுப்ப வசதி செய்ய வேண்டும். இவற்றை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க, கல்லுாரிகளில் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவினர் அவ்வப்போது கூடி, புகார்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும். இந்த விபரங்களை அனைவரும் அறியும்படி, கல்லுாரி அறிவிப்பு பலகையில் தகவலாக இடம்பெறச் செய்ய வேண்டும். ஆன்லைன் புகார் பெறும் நடைமுறைக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஏ.ஐ.சி.டி.இ.,யிடமிருந்து பொறியியல் கல்லுாரிகள் ஒப்புதல் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை