தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், பெற்றோர் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
புதிய மாணவர்களிடம், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல், சட்டவிரோதமாக நன்கொடை வசூலிக்கப்படுகிறது. 'எந்த பள்ளியும் நன்கொடை வசூலிக்கக் கூடாது' என, கண்டிப்பான உத்தரவு இருந்தும், பள்ளிகளில், பல்வேறு பெயர்களில் நன்கொடை பெறப்படுகிறது. அத்துடன், வரும் கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில், முதல் பருவத்திற்கான தொகையும் வசூலிக்கப்படுகிறது. இது, பல பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, பல மடங்கு அதிகமாக உள்ளது.
இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் வரைமுறை இன்றி, கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து, அரசு அமைத்த கல்வி கட்டண கமிட்டியும் விசாரிக்கவில்லை. தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையும் கண்டு கொள்ளவில்லை. அதனால், பள்ளிகளின் நெருக்கடிக்கு பயந்து, கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி, கல்வி கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை