தமிழகம் முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ்' என்ற, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் இன்று துவங்குகிறது.
தட்டம்மை நோய் மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்கு, முதல் கட்டத்திலேயே, தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம், இன்று துவங்கி, பிப்., 28 வரை, மூன்று கட்டமாக, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. முதல் இரண்டு வாரங்கள், பள்ளிகளிலும்; மூன்றாம் வாரம், அங்கன்வாடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களில், மூன்றாம் கட்ட முகாம் நடக்கும். நான்காம் வாரத்தில், விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். காலை, 8:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை முகாம் நடக்கும்.
இந்த தடுப்பூசியை, ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த குழந்தைகள் முதல், 15 வயதிற்குப்பட்டோர் வரை போட்டு கொள்ளலாம் என, தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
சுகாதார முறைகள்பின்பற்றப்படுமா?
பொதுவாக தடுப்பூசி போடும் போது குழந்தைகளின் ஆரோக்கியம், உடல்நிலை போன்றவை கணக்கில் கொள்ளப்படும். குழந்தைகளுக்கு எந்த விதமான காய்ச்சல் உட்பட நோய் தாக்கம், தொற்று இல்லாவிட்டால் மட்டுமே தடுப்பூசி போட முடியும். இதை, தடுப்பூசி போடும் குழுக்கள், நர்சுகள், 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும் என, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
தட்டம்மை நோய் மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்கு, முதல் கட்டத்திலேயே, தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம், இன்று துவங்கி, பிப்., 28 வரை, மூன்று கட்டமாக, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. முதல் இரண்டு வாரங்கள், பள்ளிகளிலும்; மூன்றாம் வாரம், அங்கன்வாடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களில், மூன்றாம் கட்ட முகாம் நடக்கும். நான்காம் வாரத்தில், விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். காலை, 8:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை முகாம் நடக்கும்.
இந்த தடுப்பூசியை, ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த குழந்தைகள் முதல், 15 வயதிற்குப்பட்டோர் வரை போட்டு கொள்ளலாம் என, தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
சுகாதார முறைகள்பின்பற்றப்படுமா?
பொதுவாக தடுப்பூசி போடும் போது குழந்தைகளின் ஆரோக்கியம், உடல்நிலை போன்றவை கணக்கில் கொள்ளப்படும். குழந்தைகளுக்கு எந்த விதமான காய்ச்சல் உட்பட நோய் தாக்கம், தொற்று இல்லாவிட்டால் மட்டுமே தடுப்பூசி போட முடியும். இதை, தடுப்பூசி போடும் குழுக்கள், நர்சுகள், 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும் என, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை