Ad Code

Responsive Advertisement

7வது ஊதிய குழு பரிந்­து­ரையின் சீராய்வு முடிந்­தது; மத்­திய அரசு ஊழி­யர்கள் ‘அலவன்ஸ்’ உய­ரு­கி­றது!!!

மத்­திய அரசு ஊழி­யர்­களின், ‘அலவன்ஸ்’ தொடர்­பாக, ஏழா­வது ஊதியக் குழு அளித்­துள்ள பரிந்­து­ரையை, சீராய்வு செய்யும் பணி முடி­வ­டைந்து உள்­ளது. இதை­ய­டுத்து, புதிய அலவன்ஸ் மற்றும் அலவன்ஸ் உயர்வு குறித்த அறி­விப்பை, மத்­திய அரசு விரைவில் வெளி­யிடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இதனால், 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்­திய அரசு ஊழி­யர்கள் பய­ன­டைவர்.


மத்­திய அரசு ஊழி­யர்­களின் ஊதிய உயர்வு தொடர்­பாக, ஏழா­வது ஊதியக் குழு அளித்த பரிந்­து­ரைக்கு, 2016 ஜூன், 29ல், மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் வழங்­கி­யது. அதே சமயம், அலவன்ஸ் குறித்த பரிந்­து­ரைகள் மீது மட்டும் முடிவு எடுக்­காமல், ஒத்தி வைத்­தது. இதை­ய­டுத்து, அலவன்ஸ் தொடர்­பான பரிந்­து­ரை­களை சீராய்வு செய்ய, நிதித் துறை செயலர் அசோக் லாவாசா தலை­மையில், குழு அமைக்­கப்­பட்­டது. இக்­குழு, ஏழா­வது ஊதியக் குழு தெரி­வித்த, அலவன்ஸ் பரிந்­து­ரை­களை சீராய்வு செய்யும் பணியை மேற்­கொண்டு வந்­தது. தற்­போது, இப்­ப­ணிகள் முடி­வ­டைந்து விட்­ட­தாக தகவல் வெளி­யாகி உள்­ளது.
உ.பி., – மணிப்பூர் உள்­ளிட்ட மாநி­லங்­களில் தேர்தல் நடை­பெற்று வரு­வதால், புதிய அலவன்ஸ் குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை, மத்­திய அரசு வெளி­யி­டாமல் ஒத்தி வைத்­துள்­ளது. ‘மார்ச், 11ல், தேர்தல் முடி­வுகள் வெளி­யான பின், மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்­கான புதிய அலவன்ஸ், அலவன்ஸ் உயர்வு ஆகி­யவை குறித்த அறி­விப்பு வெளி­யாகும்’ என, அரசு உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: ஏழா­வது ஊதியக் குழு, நடை­மு­றையில் உள்ள, 193 வகை­யான அல­வன்­சு­களை ஆராய்ந்­தது; அவற்றில், 51 அல­வன்­சு­களை நீக்­கவும், 37 அல­வன்­சு­களை சீரமைக்கவும், மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்து இருந்­தது. இப்­ப­ரிந்­து­ரையை, அசோக் லாவாசா குழு, சீராய்வு செய்து முடித்­துள்­ளது. இக்­குழு, மத்­திய அரசு ஊழி­யர்­களின் வீட்டு வாடகை, பயண அலவன்ஸ் ஆகி­ய­வற்றை, கணி­ச­மாக உயர்த்த பரிந்­து­ரைத்­துள்­ள­தாக தெரி­கி­றது. மத்­திய அரசின் அறி­விப்­பிற்கு பின், புதிய அலவன்ஸ் நடை­முறை, வரும் ஏப்., முதல் அம­லுக்கு வரும். இவ்­வாறு அவர் கூறினார்.
அதி­க­ரிப்பு:நடப்பு நிதி­யாண்டு பட்­ஜெட்டில், மத்­திய அரசு ஊழி­யர்­களின் அலவன்ஸ் செல­வி­னங்­க­ளுக்கு, 64,677 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டது. இது, 2017 – 18ம் நிதி­யாண்­டிற்கு, 69,222 கோடி ரூபா­யாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது. இதே காலத்தில், பயண அலவன்ஸ், 4,323 கோடி ரூபாயில் இருந்து, 4,714 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது. வரும் நிதி­யாண்டில், பயண அலவன்ஸ் தவிர்த்து, இதர அல­வன்­சு­க­ளுக்­கான ஒதுக்­கீடு, 7 சத­வீதம் உயர்த்­தப்­பட்டு உள்­ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement