Ad Code

Responsive Advertisement

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 1 கடைசி நாள்


நீட் தேர்விற்கு ஆன்-லைன் விண்ணப்பம் மார்ச் 1ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நேர பதட்டத்தை தவிர்க்க மாணவர்கள் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.
மார்ச் 1ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிகிறது. எனவே புதுச்சேரி மாணவ மாணவிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.நீட் நுழைவுத் தேர்விற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து கல்வியாளர்கள் கூறியவை:1. நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையானவை: மாணவரின் கல்வி தகுதி, சுய விபரங்கள், முகவரி ஆதார் எண் இ மெயில் முகவரி. வலது ஆள் காட்டி விரல்ரேகை கிரடிட் கார்டு, டெபிட் கார்டில் விண்ணப்ப பணம் செலுத்தியதற்கான அத்தாட்சி மாணவரின் கையொப்பம் அண்மையில் எடுக்கப்பட்ட மாணவரின் புகைப்படம் மாணவர் அல்லது பெற்றோரின் மொபைல் எண் இவை அனைத்தும் ஆன்-லைன் அப்லோடு செய்வதற்கு வசதியாக ஜே.பி., பைலாக தயார் செய்து கொள்ள வேண்டியது முக்கியம்.2.விண்ணப்பித்தினை ஆன்-லைவில் பூர்த்தி செய்யும் முறை:நீட் ஆன்-லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்வது நான்கு கட்டங்களை கொண்டுள்ளது.
நீட் தேர்வின் அதிகாரபூர்வமான இணைய தளத்திற்கு சென்று, அப்ளை என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை கவனமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.பின், மாணவரின் பெயர், தாய், தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித் தகுதி, செக்யூரிட்டி பின், இ-மெயில் முகவரி முழு தகவல்களையும் விண்ணப்பித்தில் பூர்த்தி செய்து சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும்.இரண்டாம் கட்டமாக மாணவரின் புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும்.மூன்றாவதாக விண்ணப்ப கட்டணம் நெட் பேங்கிங் அல்லது இ-செலான் முறையில் கட்டப்போகிறாமா என்பதையும் குறிப்பிட வேண்டும். இ-செலான் எனில் அதனை பிரின்ட் அவுட் எடுத்து அருகில் வங்கியில் செலுத்தலாம்.இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும் நான்காம் கட்டமாக விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, குறைந்தபட்சம் நான்கு பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்வது நல்லது.3. ஆன்-லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் செய்ய வேண்டியது:கிராமங்கள் தோறும் உள்ள பொதுசேவை மையங்கள் நீட் நுழைவு தேர்வு விண்ணப்பித்தினை பூர்த்தி செய்ய உதவுகின்றன.

அவை மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால் தவறு நேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய பகுதியில் எங்கெல்லாம் பொது சேவை மையங்கள் உள்ளன என்பதை www.csc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.4. நீட் நுழைவுத் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.

இதுவரை ஆதார் எண் எடுக்காதவர்கள் எடுத்து வைத்து வைத்துக்கொள்ளுவது நல்லது.கவுன்சிலிங் தொடர்பான விபரங்கள் இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. எனவே இ-மெயில் இல்லாத மாணவர்கள் மின்னஞ்சலை உருவாக்கி கொள்ளுவது நல்லது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement