திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள், எந்த பள்ளிகளில் படிக்கின்றனர் என்பது குறித்த விவரங்களை சேகரிக்க கேரள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு சம்பளத்தை வாங்கும், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில்தான் படிக்க வைக்கவேண்டும் என்று அலகாபாத்உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை பின்பற்றி கேரளாவிலும் நடவடிக்கை மேற்ெகாள்ள மாநில அரசு தீர்மானித்துள்ளது.
இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்பது குறித்த விவரங்களை சேகரிக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாநில கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவுக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குழந்தைகளை இந்த பள்ளியில்தான் படிக்க வைக்கவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தசட்டத்தில் இடம் இல்லை. தங்கள் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்க வைப்பது என்பது பெற்றோரின் உரிமையாகும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை