அரசு கேபிள், 'டிவி' சந்தாதாரர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, 'மொபைல் ஆப்' மூலம் நேரடியாக செலுத்தும் திட்டம், விரைவில் அறிமுகம் ஆகிறது. இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:
பொது மக்களுக்கு மாத சந்தா, 70 ரூபாயாக நிர்ணயித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்; 2011 நவ., 11ல், அது அமல்படுத்தப்பட்டது. அதில், 20 ரூபாய் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு தரப்படுகிறது; அதற்காக ரசீது வழங்கப்படுகிறது.
எனினும், சில ஆப்பரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக வசூலிப்பதாக, பொது மக்கள் புகார் கூறுகின்றனர். அதனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும், சந்தாதாரர் செலுத்துவதற்காக, ஒரு பிரத்யேக, 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டு வருகிறது. அதை, 'ஆண்ட்ராய்டு போன்' மூலம் பதிவிறக்கம் செய்து, மாத கட்டணத்தை, அரசுக்கு நேரடியாக செலுத்தலாம்.
இதற்காக, சந்தாதாரர்களின் விபரம் தொகுக்கும் பணி நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, ஆப்பரேட்டர்களுக்கு, வங்கி மூலம் கமிஷன் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லாபத்தில் அரசு கேபிள்!
மற்ற நிறுவனங்கள், மாத வாடகையாக, 150 ரூபாய் வரை வசூலிக்கும் நிலையில், குறைந்த கட்டணம் வசூலிக்கும் அரசு கேபிள், 'டிவி'யும் லாபம் பார்க்க துவங்கியுள்ளது. 2011 - 12ல், 23 லட்சம் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய இந்நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில், 5.2 கோடி; 12.02 கோடி; 18.46 கோடி; 34.95 கோடி ரூபாய் என, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை