🐮 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும்பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயாராக உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
🐮 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் குழுவுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் நள்ளிரவில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
🐮 அப்போது அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்.
🐮 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.
🐮 உங்கள் போராட்டத்தை எங்கள் போராட்டமாக அரசு நினைக்கிறது.
🐮 அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
📝 மேலும், ஜல்லிக்கட்டு குறித்து 24 மணிநேரத்திற்குள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவார்.
🐮 நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் எனவும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
🔶 மேலும் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
🔷 நாடாளுமன்றத்திலும் குடியரசுத்தலைவரிடமும் எம்.பி.க்கள் மூலம் அவசரச்சட்டம் கொண்டு அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை