Ad Code

Responsive Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


அரிசிக்கான குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டைகளுக்கும் முகாம்களில் தங்கியுள்ள தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement