தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.
ஐ.ஐ.டி., யில், இன்ஜினியரிங் படிக்க, இரண்டு கட்ட நுழைவு தேர்வும், என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - தஞ்சையிலுள்ள, ஐ.ஐ.சி.பி.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிக்க, ஒரு கட்ட நுழைவுத்தேர்வும் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.
இதில், முதல் கட்ட, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு, ஏப்., 2, 8 மற்றும் 9ம் தேதிகளில், நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன் லைன் விண்ணப்ப பதிவு, டிச., 1ல் துவங்கியது. இன்று இரவு, 11:59 மணியுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், நாளை இரவு, 11:59 மணியுடன் முடிகிறது. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படாது என, தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை