'ஆதார்' விபரம் தராத ரேஷன் கார்டுகளை முடக்க, உணவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' எண் வாங்கப்படுகிறது. பலர், ஆதார் கார்டு விபரம் தராமல் அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது, 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 93 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்துஉறுப்பினர்களின், ஆதார் விபரத்தையும் பதிவு செய்துள்ளனர்.
முடக்க, முடிவு
மீதி கார்டுதாரர்கள், தங்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் ஆதார் விபரம் மட்டும் வழங்கியுள்ளனர். ஆனால், நான்கு லட்சம் கார்டுதாரர், ஆதார் விபரம், மொபைல் எண் என, எதையும் ரேஷன் கடைகளில் பதிவு செய்யவில்லை.
பதிவு செய்ததும் பொருட்கள்
எனவே, இவர்களின் கார்டுகளை மட்டும், ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'பில்' போட முடியாதவாறு முடக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு, அவர்களுக்கு தெரிவிக்கப்படும். அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்திய பின், கார்டு மீதான முடக்கத்தை ரத்து செய்வர். பின், அந்த கார்டுதாரர், ரேஷன் கடைக்கு சென்று, ஆதார் பதிவு செய்ததும், பொருட்கள் வழங்கப்படும். எனவே, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், விரைவாக, ஆதார் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை