முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக, சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோரை ஊக்குவிக்க, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படுகிறது.
விருது பெறுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். கடந்த ஆண்டுக்கான விருதுக்கு, டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜன., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை