ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மண்டல வைப்பு நிதி கமிஷனர், பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஓய்வூதியம் பெறுவோர், உயிர் வாழ் சான்றிதழ்,மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க, ஜன., 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, 'jeevan pramaan portal' என்ற இணையதளம் வழியாக, சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.
இச்சேவையை, பொதுச் சேவை மையம், அரசின், இ - சேவை மையங்கள் மூலமாகவும் பெறலாம்; பி.எப்., அலுவலகத்தையும்அணுகலாம். சான்றிதழ்கள் சமர்ப்பிக்க செல்வோர், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓய்வூதிய வழங்கு ஆணை, மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை