பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்பு முதலாவதாக தாக்கலாகவுள்ள மத்திய பட்ஜெட்டில், ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதன்படி, கணக்கு வைத்திருக்கும் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் மாதத்துக்கு 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கப்படவுள்ளது. அதற்கு மேல் ஏடிஎம் பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம், டெபிட், கிரெடிட் கார்டுகள், இணைய தள வங்கிப் பரிவர்த்தனை, மொபைல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட மின்னணு பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், கடைகள், சேவை நிறுவனங்களில் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதும் அதிகரித்து, செலவழிப்பு அனைத்துமே கணக்கில் வரும் என்பதால் கறுப்புப் பண உருவாக்கம் தடுக்கப்படும் என மத்திய அரசு கருதுகிறது. ஏடிஎம்களில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கும் புதிய விதிமுறையை பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை