மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், சிவகங்கை மாவட்டங்களில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் நாளை ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் பள்ளிகளும் நாளை விடுமுறை அறிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ் ராவ் தெரிவித்துள்ளார்.
இதேபோல திண்டுக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வினய் விடுமுறை அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், திருப்பூர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். இதேபோல திருப்பூரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை விடுமுறை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே தனியார் மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இப்போது அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு வருகின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை