'பிளஸ் 2 செய்முறை தேர்வில், முறைகேடுக்கு இடமின்றி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை இயக்குனர், எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 2ல் துவங்கி, 31ல் முடிகிறது.
தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதில், 'தியரி' என்ற கருத்தியல் தேர்வுடன், அறிவியல் சார்ந்த செய்முறை தேர்வும் நடத்தப்படும்.இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண் உயிரியல், நுண் வேதியியல், நர்சிங், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், இல்ல அறிவியல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் உள்ளிட்ட பாடங்களுக்கு, செய்முறை தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு, பிப்., 2 முதல், அந்தந்த பள்ளி ஆய்வகங்களில் துவங்குகிறது.
இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி பிறப்பித்த உத்தரவு: தேர்வின்போது, வேறு பள்ளி கண்காணிப்பாளர்களைபணியில் அமர்த்த வேண்டும். செய்முறை உபகரணங்களை, மாணவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும். செய்முறை தேர்வுக்கான, 'ரெக்கார்ட்' புத்தகங்களை மாணவர்களிடம் பெற்று, மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வில் எந்த மாணவருக்கும், முறைகேடாக கூடுதலாகவோ, குறைத்தோ மதிப்பெண் வழங்கக் கூடாது.
இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை