Ad Code

Responsive Advertisement

2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கல்

2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்டொடர் ஜனவரி 31-ம் தேதி துவங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 31-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 2-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை 3 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் வரை நடத்தப்படுகிறது.

ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்வதற்காக பட்ஜெட் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் 92 ஆண்டுககளாக ரயில்வேதுறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட்டிலேயே ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ராஜ்நாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement