அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் 19 நடுநிலைப்பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் பயிலும் 70 மாணவ,மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடத்தில் நிதியுதவியும் செய்து நடத்தும் ஆசிரியர் திரு.ர.ஜாபர்சாதிக் அவர்களுக்கும்,வினாக்களை தட்டச்சி செய்து தந்து உதவும் ஆசிரியர் திரு.குமரவேல் அவர்களுக்கும், மேலும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வரும் ஆசிரியர்களான திரு.மணிகண்டன் திரு.தமிழ்வேல், திரு.பாலகிருஷ்ணன். ஆசிரியைகளான திருமதி .பூங்கொடி, திருமதி.சிவசக்தி, திருமதி.சிவானந்த விஜயலெட்சுமி, திருமதி.விஜயா மற்றும் திருமதி.சிவகாமி போன்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மாணவர்களுக்கு பரிசுகள், தேனீர்,பிஸ்கட்கள், வினா மற்றும் விடைத்தாள்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவைகளுக்கு நிதியுதவி அளித்துவரும் ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்.
நன்றி: திரு.மணிகண்டன் அவர்கள்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை