டி.என்.பி.எஸ்.சி., 11 உறுப்பினர்கள் நியமனம் ரத்து....
சென்னை;டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, ஜன., 31ம் தேதி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., முன்னாள்எ ம்.பி.,யான
டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த, மூன்று ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உறுப்பினர்களை நியமிக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சி காலம் முடிவதற்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், உறுப்பினர்கள்அவசர கதியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்தின்போது, தகுதி, திறமையை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், ஆளுங்கட்சி மற்றும் முதல்வரின் விசுவாசிகளை நியமித்து உள்ளனர். உறுப்பினர் நியமனத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. எனவே, '11 உறுப்பினர்களின் நியமனம், சட்டவிரோதமானது' என, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதே போன்ற மனுக்களை சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர், கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் தாக்கல் செய்து இருந்தனர்.இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 பேர் நியமனத்தை ரத்து செய்து, இன்று உத்தரவு பிறப்பித்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம் பெயரை மீண்டும் பரிசீலனை செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் நியமனை அரசாணை ரத்து செய்யப்படுவதாக கூறினர்.
சென்னை;டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, ஜன., 31ம் தேதி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., முன்னாள்எ ம்.பி.,யான
டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த, மூன்று ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உறுப்பினர்களை நியமிக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சி காலம் முடிவதற்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், உறுப்பினர்கள்அவசர கதியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்தின்போது, தகுதி, திறமையை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், ஆளுங்கட்சி மற்றும் முதல்வரின் விசுவாசிகளை நியமித்து உள்ளனர். உறுப்பினர் நியமனத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. எனவே, '11 உறுப்பினர்களின் நியமனம், சட்டவிரோதமானது' என, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதே போன்ற மனுக்களை சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர், கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் தாக்கல் செய்து இருந்தனர்.இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 பேர் நியமனத்தை ரத்து செய்து, இன்று உத்தரவு பிறப்பித்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம் பெயரை மீண்டும் பரிசீலனை செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் நியமனை அரசாணை ரத்து செய்யப்படுவதாக கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை