Ad Code

Responsive Advertisement

புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடிக்க ஆணை கோரி மனு



தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் முதல்வர் தனிப்பிரிவில் அளித்துள்ள கோரிக்கை மனு:

சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் ‘வார்தா’ புயல் பாதிப்பால் ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு ஒரு சிறிய உதவியாக இருக்கும்.

எனவே, புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொள்ளலாம். இந்த மாத சம்பளத்திலேயே பிடித் தம் செய்துகொள்ளும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.அகவிலைப்படி உயர்வால் ஒவ் வொரு ஆசிரியருக்கும், அரசு ஊழியருக்கும் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் கூடுதலாக கிடைக்கும். எனவே, ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொள்வதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement