''கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
இச்சேவையின் மூலம் நாட்டில் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்குட்பட்ட கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தற்போது 89 சேவை மையங்கள் மூலம் தினமும் 50 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.'ஸ்டூடண்ட் கனெக்ட்' மூலம் கல்லுாரி, பல்கலைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். மாணவர்கள் வேலைநாட்களில் அருகிலுள்ள சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை கல்லுாரி, பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
மாணவர்கள் தங்கியுள்ள முகவரி அல்லது பெற்றோர் நிரந்தர முகவரியில் பாஸ்போர்ட் பெறலாம். பிறப்பு சான்று, 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, முகவரி ஆதாரமாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டைஉட்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இணைக்க வேண்டும். www.passportindia.gov.in என்ற இணையத்தில் மேலும் விவரங்களை அறியலாம்.பாஸ்போர்ட் சேவை மையங்களில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்படும்.
சமர்ப்பிக்காதவர்கள், 60 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை