ரேஷன் கார்டில், உள் தாள் ஒட்டும் பணி, ஜன., 1ல் துவங்குகிறது. தமிழக அரசு, பழைய ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' விபரம் வாங்கப்படுகிறது. ஆனால், பலர் ஆதார் விபரம் தராமல் உள்ளனர்.
ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம், டிச., 31ல் முடிகிறது. இதனால், வழக்கம் போல், அவற்றில், உள் தாள் ஒட்டி, செல்லத்தக்க காலத்தை நீட்டிப்பதாக, அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் உள் தாள் ஒட்டும் பணி, ஜன., 1ல் துவங்க உள்ளது.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், மதுரை ஆகிய இடங்களில் உள்ள அரசு அச்சகங்களில், ரேஷன் உள் தாள் அச்சிடும் பணி நடக்கிறது. அவை, உடனுக்குடன், கலெக்டர் அலுவலகம் வழியாக, ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும். ஒரு கடையில், ஒரு நாளைக்கு, 100 கார்டுகள் என, ஜன., 1 முதல், உள் தாள் ஒட்டும் பணி துவங்கும். ரேஷனில், ஆதார் விபரம் வாங்கும் பணியும் தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை