பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் நேரத்தை, மாற்ற வேண்டும்' என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 8ல், துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வு, காலை, 10:00 முதல் பகல், 1:15 மணி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, காலை, 9:15 முதல் நண்பகல், 12:00 மணி வரையும் நடக்கிறது.
இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கூறியதாவது: பத்தாம் வகுப்புக்கு, காலை, 9:15 மணிக்கு தேர்வு நடத்தும் முறை, 2014ல், அறிமுகமானது. அதற்கு, காலை, 8:30 மணிக்கே மாணவர்கள், பள்ளிக்கு வர வேண்டும். நகர பகுதியில் இருந்து, வெகு துாரத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் மலை கிராம மாணவர்கள், காலை, 7:00 மணிக்கே, வீடுகளில் இருந்து புறப்பட்டால் தான், உரிய நேரத்தில் பள்ளிக்கு வர முடியும்.
ஆனால், பல கிராமங்களில் இருந்து, அதிகாலையில் பஸ் வசதி இல்லை. மேலும், காலை உணவு சாப்பிட முடியாமல், மாணவர்கள் பட்டினியுடன் தேர்வுக்கு வரும் சூழல் உள்ளது. அதனால், அவர்களில் பலர், சரியாக தேர்வு எழுத முடிவதில்லை. எனவே, 10ம் வகுப்பு தேர்வு நேரத்தை, காலை, 10:00 மணியாக மாற்ற வேண்டும். இதற்கான அறிவிப்பை, அவசரமாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை