வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு கழிக்கப்படும் தொகை குறித்த விபரத்தை, மின் கட்டண ரசீதில் தெரிவிக்கும் நடைமுறையை, மின் வாரியம் துவக்கி உள்ளது.
குழப்பம் : இதன்படி, 100 யூனிட் இலவசம் போக, மீதி மின்சாரத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், கழிக்கப்படும் தொகை குறித்த விபரத்தை, ரசீதில் தெரிவிக்கவில்லை. மொத்த கட்டணம் மட்டும் தெரிவிக்கப்பட்டது. இதனால், எவ்வளவு கழிக்கப்படுகிறது என்ற விபரம் தெரியாமல், நுகர்வோர் குழப்பம் அடைந்தனர். தற்போது, அந்த விபரத்தை ரசீதில், மின் வாரியம் தெரிவித்து வருகிறது.
பதிவு : இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீடுகளில், 100 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தினால், கட்டணம் கிடையாது; 500 யூனிட்டிற்கு கீழ், 200 ரூபாய்; அதற்கு மேல் பயன்படுத்தினால், 350 ரூபாயும் கழிக்கப்படும். கட்டண மையங்களில், அந்த தொகையை கழித்து, மீதி பணம் வாங்கப்பட்டது. மென்பொருள் உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், அந்த விபரத்தை ரசீதில் தெரிவிக்கவில்லை. தற்போது, கழிக்கப்படும் தொகை விபரம் ரசீதில் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை