Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு

தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு வரும் 28-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மாத இறுதி நாளில் அல்லது அடுத்த மாத முதல் நாளில் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி வருவதால், இந்த முறை முன்கூட்டியே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் கோரி இருந்தது. இதை ஏற்று தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் மாத ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ஆளுநரின் ஆணைப்படி  தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாத ஊதியம் 28-ம் தேதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருவூல அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement