தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு வரும் 28-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு மாத இறுதி நாளில் அல்லது அடுத்த மாத முதல் நாளில் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி வருவதால், இந்த முறை முன்கூட்டியே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் கோரி இருந்தது. இதை ஏற்று தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் மாத ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ஆளுநரின் ஆணைப்படி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாத ஊதியம் 28-ம் தேதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருவூல அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை