Ad Code

Responsive Advertisement

'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்.

மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்யமுடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது. 

இதற்கு, மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒன்று அல்லது இரண்டு மாணவர்களுக்கு, அறிவியல் திட்டங்கள் மேற்கொள்ள, 5,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான பதிவு, ஆக., 25ல் துவங்கியது.

வரும், 30ம் தேதிக்குள், ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே திட்டங்கள் ஏற்கப்படும். தமிழகத்தின்பெரும்பாலான மாவட்டங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, இதுகுறித்த அறிவிப்பை, மாவட்டகல்வித் துறை வழங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்தல், திட்டங்களை தேர்வு செய்தல் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கோ, பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கோ, உரிய வழிகாட்டுதலும் இல்லை; பயிற்சியும் இல்லை. தொடர்ச்சியாக, இரு ஆண்டுகள், அறிவியல் கண்காட்சிக்காக அனுமதிக்கப்பட்ட பள்ளிகள், மீண்டும் பதிய முடியவில்லை. இதுகுறித்து, கல்வித் துறைக்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கும், பலர் புகார் செய்தும், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால், விருதுக்கான பதிவில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்னணியிலும், அரசு பள்ளிகள் பின்தங்கியும் உள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement