Ad Code

Responsive Advertisement

தொழில்நுட்ப தேர்வு அக்டோபர் 5ல் 'ரிசல்ட்'

ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது. ஓவியம், தையல், நடனம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கு, நவம்பர், 2015ல் தேர்வு நடத்தப்பட்டது; 50 ஆயிரத்தும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிவுகள், 10 மாதங்களாக வெளியிடப்படவில்லை. தற்போது, அக்., 5ல் முடிவுகள் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி கூறியுள்ளதாவது: இந்த தேர்வுக்கான, மேல்நிலை மற்றும் கீழ்நிலை சான்றிதழ்கள், அந்தந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரால், அக்., 5 முதல் அக்., 25 வரை வினியோகிக்கப்படும். தேர்ச்சி பெறாதோருக்கு, தேர்வு மையத்திலேயே, அதற்கான குறிப்பாணை வழங்கப்படும்; இருப்பிட முகவரிக்கு சான்றிதழ்கள் அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement