ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது. ஓவியம், தையல், நடனம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கு, நவம்பர், 2015ல் தேர்வு நடத்தப்பட்டது; 50 ஆயிரத்தும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிவுகள், 10 மாதங்களாக வெளியிடப்படவில்லை. தற்போது, அக்., 5ல் முடிவுகள் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி கூறியுள்ளதாவது: இந்த தேர்வுக்கான, மேல்நிலை மற்றும் கீழ்நிலை சான்றிதழ்கள், அந்தந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரால், அக்., 5 முதல் அக்., 25 வரை வினியோகிக்கப்படும். தேர்ச்சி பெறாதோருக்கு, தேர்வு மையத்திலேயே, அதற்கான குறிப்பாணை வழங்கப்படும்; இருப்பிட முகவரிக்கு சான்றிதழ்கள் அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை