Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், செப்., 27 முதல், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2017 மார்ச்சில் நடக்க உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சியில் பங்கேற்க, ஜூன், 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அப்போது, பதிய தவறியோர், செப்., 27 முதல், அக்., 8 வரை, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில், பதிவு செய்து கொள்ளலாம். செய்முறை பயிற்சி வகுப்பில், 80 சதவீதம் பங்கேற்றால் மட்டுமே, பொதுத்தேர்வில்பங்கேற்க முடியும். பதிவுக்கான விண்ணப்பங்களை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement