திருப்பூரில் பள்ளி ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். திருப்பூர், வீரபாண்டி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
அவரது பதிலில் அதிருப்தியடைந்த ஆசிரியை, மாணவரை அடித்ததாகவும், அப்போது திடீரென அந்த மாணவர் பதிலுக்கு ஆசிரியை கன்னத்தில் இருமுறை அறைந்ததாகவும், இதில் ஆசிரியை அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்து சேதமானதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் பள்ளி தலைமையாசிரியை மூலம் கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிறகு கல்வித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய விசாரணையில், மாணவர் தவறை ஒப்புக் கொண்டதால், பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் கூறியதாவது:
சம்பவம் குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் விசாரணையில், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஆசிரியை தன்னை அடித்த காரணத்தால், அதை தடுத்தபோது தவறுதலாக தனது கை ஆசிரியை மீது பட்டுவிட்டது என்று மாணவர் விளக்கமளித்தார் என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை