Ad Code

Responsive Advertisement

அண்ணா பல்கலை தொலைநிலை கல்வி சேர்க்கை அறிவிப்பு

அண்ணா பல்கலையில், எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில், தொலைநிலை கல்வி மூலம், எம்.பி.ஏ., படிப்பில் எட்டு பாடப்பிரிவு களிலும், எம்.எஸ்சி.,யில் கம்யூ., சயின்ஸ் பிரிவிலும், எம்.சி.ஏ., ஒரு பாடப்பிரிவிலும் தொலைநிலையில் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 

இதில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ.,வில் சேர, பல்கலையின் சார்பில் நடத்தப்படும், 'டீட்' என்ற தொலைநிலை கல்வி நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.


இந்த தேர்வு, ஆக., 21ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை, அண்ணா பல்கலையில், 650 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ.,வுக்கு, ஆக., 10ம் தேதிக்குள்ளும், எம்.எஸ்சி.,க்கு, செப்., 3க்குள்ளும் அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement