'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, 'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 53 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் முதல், திருத்தியமைக்கப்பட்ட சம்பளம் கிடைக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 'இந்தாண்டு, ஜனவரி, 1ம் தேதி முதல், சம்பளக் கமிஷன் நடைமுறைக்கு வருவதால், அதற்கான, அரியர்ஸ் பணமும், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் திருத்தி அமைப்பதற்கு முன்பு இருந்த, டி.ஏ., எனப்படும் அகவிலைப்படியான, 125 சதவீதம் என்ற அடிப்படையில், புதிய
சம்பளம் மற்றும் அரியர்ஸ் வழங்கப்படும். திருத்தி அமைக்கப்பட்டுள்ள சம்பளத்துக்கான, புதிய அகவிலைப்படி பின்னர் அறிவிக்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை