வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்தவர்களில், 60 சதவீதம் பேர் மேற்படிப்பு படித்து வருகின்றனர்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - எழிலரசன்: வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 85 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்ட பின், 48,155 பேருக்குவேலை வழங்கப்பட்டதாககூறப்பட்டுள்ளது. இது, ஒரு சதவீதம் கூட இல்லை.
அமைச்சர் பன்னீர்செல்வம்: கடந்த, 2012 முதல், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் தவிர, பொதுவான பணியிடங்களுக்கு, பொது அறிவிப்பு வெளியிடப்பட்டே, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அமைச்சர் நிலோபர் கபில்: வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள, 85 லட்சம் பேரில், 60 சதவீதம் பேர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள்; அவர்கள் மேற்படிப்பு படித்து வருகின்றனர். கடந்த, இரண்டு ஆண்டு களில், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், 77,696 பேர் வேலைபெற்றுள்ளனர்.
ஆசிரியர் தேர்வாணையம் மூலம், 56,300 பேர்; தனியார் நிறுவனங்கள் மூலம், 1.42 லட்சம் பேர்; அரசுப் பணியாளர் தேர்வாணையம், தனியார் வேலைவாய்ப்பு முகாம் போன்றவற்றின் மூலம், ஐந்து லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - எழிலரசன்: வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 85 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்ட பின், 48,155 பேருக்குவேலை வழங்கப்பட்டதாககூறப்பட்டுள்ளது. இது, ஒரு சதவீதம் கூட இல்லை.
அமைச்சர் பன்னீர்செல்வம்: கடந்த, 2012 முதல், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் தவிர, பொதுவான பணியிடங்களுக்கு, பொது அறிவிப்பு வெளியிடப்பட்டே, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அமைச்சர் நிலோபர் கபில்: வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள, 85 லட்சம் பேரில், 60 சதவீதம் பேர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள்; அவர்கள் மேற்படிப்பு படித்து வருகின்றனர். கடந்த, இரண்டு ஆண்டு களில், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், 77,696 பேர் வேலைபெற்றுள்ளனர்.
ஆசிரியர் தேர்வாணையம் மூலம், 56,300 பேர்; தனியார் நிறுவனங்கள் மூலம், 1.42 லட்சம் பேர்; அரசுப் பணியாளர் தேர்வாணையம், தனியார் வேலைவாய்ப்பு முகாம் போன்றவற்றின் மூலம், ஐந்து லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை