பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 41 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக (டிஇஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட புக்கத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.கற்பகவல்லி, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அஞ்சூர் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.சரசுவதி, சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அனகாபுத்தூர், அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எம்.பரிமளம், மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலராகவும், கோவிலம் பாக்கம் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் த.சுப்பிரமணியன், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பழையநாப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.கே.கங்காதர ரெட்டி, பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலராகவும், ஆண்டார் குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜி.லில்லிபுஷ்பராணி, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், அயப்பாக்கம், அரசு உயர்நிலைப் ்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.எத்திராஜூலு, சென்னை வடக்கு மாவட்ட கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் சிவ்வாடா அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை இ.செந்தமிழ்ச்செல்வி, சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்ககத்தின் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை, அடையார் அடுத்த ஊரூர் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.எடிசன், சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை